வெருகல் சித்திர வேலாயுதர் தீர்த்தோற்சவம்
கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம், வெகு சிறப்பாக கடந்த வெள்ளிக்கிழமை (12) காலை வெருகல் – மஹாவலி கங்கை ஆற்றங்கரையில் நடைபெற்றது.
கஜாவல்லி, மஹாவலி சமேத சித்திர வேலாயுத சுவாமிகள் எழுந்தருளி, பக்த அடியார்களின் “அரோகரா” என்ற கோஷங்களுடன் தீர்த்தக் கரைக்கு சென்று, தீர்த்த நீகழ்வு நடைபெற்றது.
இத்தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம், ஆகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 18 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்றன. இந்நிகழ்வுகள் இன்று நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.
குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் பங்கேற்று, அருள்பெற்று, தீர்த்தமாடினர்.



















