• Home
  • இலங்கை
  • திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது
Image

திருகோணமலை மாவட்ட Ten To 10 இறுதிப்போட்டியில் ஸ்பென்ஸ் அணி சாம்பியனானது

Ten To 10 கிரிக்கெட் – ஸ்பென்ஸ் அணி சாம்பியன்

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய Ten To 10 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியில் இந்துக்கல்லூரி கிரிக்கெட் அணி மற்றும் ஸ்பென்ஸ் விளையாட்டுக்கழகம் பங்கேற்றன. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்துக்கல்லூரி அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

அவ்விலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஸ்பென்ஸ் அணி, 4 விக்கெட்டுகள் மீதமிருந்து வெற்றி பெற்று, 2025 ஆம் ஆண்டிற்கான திருகோணமலை மாவட்ட Ten To 10 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சிறந்த வீரர்கள் தேர்வு:

  • சிறந்த பந்துவீச்சாளர் – ஸ்பென்ஸ் அணியின் ரிச்சர்ட்
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – இந்துக்கல்லூரி அணியின் மனோசாந்
  • சிறந்த களத்தடுப்பாளர் – ஸ்பென்ஸ் அணியின் மகேஸ்வரன்
  • இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் – ரிச்சர்ட் (ஸ்பென்ஸ் அணி)

இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக, மாநகரசபை உறுப்பினர் இரா.சற்பரூபன், மாநகரசபை உறுப்பினர் மற்றும் திருகோணமலை கிரிக்கெட் சங்கத்தின் உபதலைவர் தி.பிரபாதரன், மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பா.வசந்தகுமார், செயலாளர் கி.பிரேமானந்த் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் நஸீர், பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் வழங்கினர்.

சார்ந்த செய்திகள்

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை

திருகோணமலையிலிருந்து வடகிழக்கே கடலில் 60 கிமீ தொலைவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது; சுனாமி அபாயம் இல்லை இன்று பிற்பகல் வேளையில் திருகோணமலையிலிருந்து…

செப் 19, 2025
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

ஜே.ஜே. முரளிதரன் ஓய்வு – ஜே.எஸ். அருள்ராஜ் புதிய மாவட்ட செயலாளர் மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர்/அரசு முகவராக பணியாற்றி வந்த, இலங்கை…

செப் 17, 2025
சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த U-14 கால்பந்து போட்டி சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டி – 2025 இற்கான Under 14 பிரிவுக்கான விண்ணப்பங்கள்…

செப் 15, 2025
திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவடைந்தது

திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் சிறப்பாக நிறைவடைந்தது

வெருகல் சித்திர வேலாயுதர் தீர்த்தோற்சவம் கிழக்கிலங்கையில் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் திருகோணமலை வெருகல் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம், வெகு…

செப் 13, 2025

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

படத்தொகுப்பு

திருகோணமலை கடற்பகுதியில் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதம் கையளிப்பு நிகழ்வு – 2025.09.29
மறைந்த அஷ்ரப் கால அரசியல் சாதனைகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸின் எதிர்கால வழிமுறைகள்
தமிழ்நாடு அரசு “தகைசால் தமிழர் விருது” வழங்கி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருக்கு கௌரவம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்
திருகோணமலை நகரம் மற்றும் சூழல் பிரதேச செயலகத்தின் மக்கள் சேவை நிகழ்ச்சி – மனையாவெளி கிராம உத்தியோகத்தர் அலுவலகம், 18 செப்டம்பர் 2025
ஸ்ரீலங்கா கணக்கு சேவை ஆணையம் அறிவித்த கணக்காய்வு அதிகாரி (Audit Officer) பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன
சிங்காவேலு மாஸ்டர் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குடப் பவணி சிறப்பாக நடைபெற்றது